போராட்டக்காரர்களுடன் இணைந்த பொலிஸ் அதிகாரி!

கொட்டாவ பிரதேசத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள பொது மக்களுடன் பொலிஸ் அதிகாரி ஒருவர் இணைந்து போராட்டத்தை வலுப்படுத்தியுள்ளார்.

‘சீருடை அணிந்திருந்தாலும் நாங்களும் மக்களுடன் இருப்போம்’ என்று பொலிஸ் அதிகாரி ஒலிப்பெருக்கியில் அறிவித்துள்ளார்.

இந்த நிலையில் பொலிஸ் அதிகாரியை மக்கள் ஆரவாரம் செய்து கைகளை தட்டி பாராட்டியுள்ளனர்.

அடுத்து வரும் ஆர்ப்பாட்டங்களில் முப்படையினரும் தம்முடன் இணைந்து அரசுக்கு எதிராக போராட முன்வர வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Leave a Reply