இராணுவ வீரர்கள் மீது பொலிஸார் தாக்குதல் – பொன்சேகா கண்டனம் !

மோட்டார்சைக்கிளில் சென்ற இராணுவ வீரர்கள் மீது பொலிஸார் நடத்திய தாக்குதலை கண்டிப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார்.

நாடாளுமன்றத்திற்கு முன்பாக நிலைமையை கட்டுப்படுத்த பொலிஸார் முன்னெடுத்த இந்த செயற்பாடு அவமானகரமானது என்றும் அவர் குறிப்பிட்டார்.

நாட்டின் தற்போதைய நிலைமை குறித்து இடம்பெற்றுவரும் நாடாளுமன்ற அமர்வில் பேசிய அவர், சீருடை அணிந்திருக்கும் அதிகாரியை இப்படியா நடத்துவது என்றும் கேள்வியெழுப்பினார்.

இதேவேளை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவும் சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்தப்பட வேண்டுமென கோரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply