அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்கப்போவதில்லை என அறிவித்தார் M.S.தௌஃபீக்!

<!–

அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்கப்போவதில்லை என அறிவித்தார் M.S.தௌஃபீக்! – Athavan News

அரசாங்கத்திற்கு வழங்கிவந்த ஆதரவை மீளப்பெறுவதாக ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினரும், திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான தௌபீக் அறிவித்துள்ளார்.

தான் தற்போது கட்சியின் தீர்மானங்களுக்கு கட்டுப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருட்களின் விலையேற்றம் மற்றும் அத்தியாவசியப் பொருட்களுக்கான தட்டுப்பாடு போன்ற காரணங்களால் மக்களின் ஆர்ப்பாட்டங்கள் வலுப்பெற்றுள்ளமையினால், தற்போது மக்களின் பக்கம் இருக்க வேண்டும் என விரும்புவதாகவும் அவர் கூறியுள்ளார்.

அரசிலமைப்பின் 20 ஆவது திருத்தச்சட்டத்திற்கு ஆதரவாக இவர் வாக்களித்திருந்தார் என்பதுக் குறிப்பிடத்தக்கது.


Leave a Reply