அரசாங்கத்தை பதவி விலகுமாறு வலியுறுத்தி காலி முகத்திடல் மற்றும் ஜனாதிபதி செயலகம் முன்பாக இரவு பகலாக தொடர்ச்சியாக ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இந்நிலையில் சற்றுமுன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுக்கொண்டிருந்த தாயொருவர் திடீரென மயங்கி வீழ்ந்த நிலையில் உடனடியாக அங்கிருந்த இளைஞர்கள் மயங்கிய தாயினை ஆம்புலன்ஸ் வாகனத்தின் மூலம் வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்றுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.








