
இன்று ( வெள்ளிக்கிழமை ) முதல் எரிபொருள் விநியோகிக்கும் நடவடிக்கையை வரையறுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, இன்று முதல் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்படவுள்ளதாக பெற்றோலிய கூட்டுதாபனம் தெரிவித்துள்ளது.
இதன்படி மோட்டார் சைக்கிளுக்காக 1000 ரூபாவிற்கும், முச்சக்கரவண்டிக்காக 1500 ரூபாவிற்கும் எரிபொருள் விநியோகிக்கப்படவுளதோடு கார், வேன், ஜீப் போன்ற வாகனங்களுக்கு அதிகபட்சமாக 5000 ரூபாவிற்கு மாத்திரம் எரிபொருள் விநியோகிக்கப்படும் என கூட்டுதாபனம் அறிவித்துள்ளது.
மேலும் பஸ், லொறி மற்றும் வணிக நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தப்படும் வாகனங்களுக்கு எரிபொருள் விநியோகிக்கும் நடவடிக்கைகளில் வரையறை கிடையாது எனவும் பெற்றோலிய கூட்டுதாபனம் தெரித்துள்ளது .





