
புதிதாக அமைக்கப்படவுள்ள அமைச்சு பதவியை பெற்றுக்கொள்ள போவதில்லை என முன்னாள் வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன ஜனாதிபதிக்கு கடிதம் மூலம் தெரியப்படுத்தியுள்ளார்.
நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடியை தீர்ப்பதற்காக இளையவர்கள் அடங்கிய அமைச்சரவை நியமிக்குமாறும் அவர்களுக்கு இடமளிக்கும் வகையில் தான் அமைச்சரவையின் பொறுப்புகளை ஏற்க போவதில்லை என பந்துல குணவர்தன ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.





