அலரி மாளிகையில் ஓதப்படும் பிரித் – தேரர் கடும் எதிர்ப்பு!

மகிந்த ராஜபக்சவை பிரதமர் பதவியில் இருந்து இராஜினாமா செய்யும் வகையில் அலரி மாளிகைக்கு அருகில் முகாமிட்டுள்ள போராட்டக்காரர்களுக்கு இடையூறு விளைவிப்பதற்காக பிரித் பிரயோகம் மேற்கொள்ளப்படுவதற்கு கொழும்பு பல்கலைக்கழகத்தின் சிங்களப் பேராசிரியர் அகலகட சிறிசுமண தேரர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

இது பிரித் துஷ்பிரயோகம் என கொழும்பில் நடைபெற்ற அனைத்து மதத் தலைவர்களின் ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் தெரிவித்தார்.

“பிரதமர் வீட்டுக்குச் செல்வதற்காக பெரும் கூட்டம் அலரி மாளிகை முன் கூடி முகாமிட்டுள்ளது. அதனைத் தடுக்கும் வகையில் சாலையின் இருபுறமும் உள்ள நடைபாதைகளில் பேருந்துகள் நிறுத்தப்பட்டு, இதுபோன்ற பீரித்கள் முறைகேடாக பயன்படுத்தப்பட்டன.

நீண்ட காலமாக அலரிமாளிகையில் இருந்து கொழும்புக்கு கொண்டு வரப்படாமல் இருந்த பீரித்கள் தற்போது ஆயுதமாக மாறியுள்ளமைக்கு எதிராக மகா சங்கத்தினரின் எதிர்ப்பை தேசத்தின் முன் வைக்க விரும்புகிறோம் என அவர் மேலும் தெரிவித்தார்.

Leave a Reply