அவசரகால சட்டத்தை உடனடியாக நீக்குமாறு கோரி புத்தளத்தில் ஆர்ப்பாட்டம்

தேசிய மக்கள் சக்தி கட்சியினரால் இன்று புத்தளத்தில் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருட்களின் விலையேற்றத்தைக் கண்டித்தும் அவசரகால சட்டத்தை உடனடியாக நீக்குமாறு கோரியும், ராஜபக்‌ஷ அரசாங்கத்தை உடனடியாக பதவி விலகுமாறு கூறியும் தேசிய மக்கள் சக்தி கட்சி இன்று புத்தளம் ஆனமடுவ நகரில் கோஷங்களை எழுப்பியவாறும், பதாதைகளை ஏந்தியவாறும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது பொலிஸாரும் கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டிருந்தமையையும் காணக்கூடியதாக இருந்தது.

Leave a Reply