48 மணிநேர அடையாள வேலை நிறுத்தம்-பல்கலைக்கழக ஊழியர் சங்கம் அழைப்பு!

அறவழியில் போராடிய பொதுமக்கள் மீது 09.05.2022 தொடுக்கப்பட்ட வன்முறையை கண்டித்து,அனைத்து பல்கலைக்கழக தொழிற்சங்க கூட்டுக்குழு கூட்ட தீர்மானத்தின்படி இன்றும்(11) நாளையும்(12) 48 மணிநேர அடையாளவேலை நிறுத்தம் செய்யவுள்ளதாக பல்கலைக்கழக ஊழியர் சங்கம் அறிவித்துள்ளது.

இது தொடர்பில் பல்கலைக்கழக ஊழியர் சங்க தலைவர் த.சிவரூபன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

அறவழியில் போராடிய பொதுமக்கள் மீது 09.05.2022 தொடுக்கப்பட்ட வன்முறையை கண்டித்து,அனைத்து பல்கலைக்கழக தொழிற்சங்க கூட்டுக்குழு கூட்ட தீர்மானத்தின்படி 12 மற்றும் 13 மே 2022 ஆகிய இரு தினங்களும் 48 மணிநேர அடையாளவேலை நிறுத்தம் செய்யவுள்ளது.

இது தொடர்பாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தலைவர், பல்கலைக்கழக துணைவேந்தர்கள் மற்றும் பதிவாளர்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனைத்து பல்கலைக்கழக தொழிற்சங்க கூட்டுக்குழுவால் அறிவிக்கப்பட்டுள்ளது.

அந்தவகையில் எமது பல்கலைக்கழக ஊழியர் சங்கமும் மேற்படி 48மணி நேர அடையாளவேலை நிறுத்தத்தினை யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் மேற்கொள்ளவிருக்கின்றது என்பதை தங்களுக்கு அறியத் தருகின்றது.

பாதுகாப்புப் பணியாளர்கள் தவிர்ந்த ஏனைய சகல கல்விசாராப் பணியாளர்களையும் இப்போராட்டத்தில் இணைந்துகொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *