நாட்டில் மூடப்பட்டுள்ள முன் பள்ளிகளை இம்மாத இறுதிக்குள் திறப்பதே எமது இலக்கு எனக் கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
இலங்கையில் கொரோனாப் பரவல் ஒப்பீட்டளவில் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டதையடுத்து படிப்படியாக நாட்டை மீளக் கட்டியெழுப்ப வேண்டிய தேவை குறித்து குறிப்பிட்டுள்ளார்.
அதனடிப்படையில், கட்டம் கட்டமாக பாடசாலைகளைத் திறக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
அதன் ஒரு அங்கமாக முன் பள்ளிகளைத் திறக்கத் தீர்மானித்துள்ளதாக அவர்; மேலும் தெரிவித்தார்.