இந்தியாவில் புதிதாக 22 ஆயிரத்து 842 பேருக்கு கொரோனா

இந்தியாவில் புதிதாக 22 ஆயிரத்து 842 பேருக்கு கொரோனா  வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மத்திய சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த ஊடக அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது, இந்தியா முழுவதும் ஒரே நாளில் 244 பேர் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்துள்ளனர்.

இதற்கமைய கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4 இலட்சத்து 48 ஆயிரத்து 817 ஆக உயர்ந்துள்ளது.

இதற்கிடையில் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 3 கோடியே 30 இலட்சத்து 94 ஆயிரத்து 529 ஆக  அதிகரித்துள்ளது.

இந்நிலையில் 2 இலட்சத்து 70ஆயிரத்து 557 பேர், கொரோனா வைரஸ் தொற்றுக்கு பல்வேறு வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர் என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *