ஜனாதிபதி தேர்தலை மையமாக வைத்தே ஈஸ்டர் தாக்குதல் நடத்தப்பட்டது !

2019 ஜனாதிபதி தேர்தலை மையமாக வைத்தே ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் நடத்தப்பட்டதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் தலதா அத்துகோரள தெரிவித்துள்ளார்.

பயங்கரவாத தாக்குதலின் பொறுப்பை இரண்டுபேர் மீதுமட்டும் சுமத்தி சம்பந்தப்பட்டவர்களை காப்பாற்றும் முயற்சியில் அரசாங்கம் ஈடுபடுவதாகவும் குற்றம் சாட்டினார்.

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பாக முன்னாள் பொலிஸ்மா அதிபர் மற்றும் பாதுகாப்பு செயலாளர் ஆகியோருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்த தாக்குதல் இருவரால் மட்டும் மேற்கொள்ளப்படவில்லை என்றும் இதன் பின்னணியில் பெரிய குழு இருப்பதாகவும் தலதா அத்துகோரள குறிப்பிட்டார்.

எதிர்க்கட்சி அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் பேசிய அவர், நாட்டின் பாதுகாப்பு தொடர்பாக இந்த அரசாங்கம் என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என்றும் கேள்வியெழுப்பினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *