6வாரங்களுக்குள் மருந்துத் தட்டுப்பாடுக்கு தீர்வு- கெஹலிய

இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள மருந்துப் பொருட்களுக்கான தட்டுப்பாடு அடுத்த 6 வாரங்களுக்குள் முடிவுக்கு வரும் என சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெலு தெரிவித்துள்ளார்.

அதேவேளை மருந்துப் பொருட்களை இறக்குமதி செய்வதற்கு தேவையான நிதி கிடைத்துள்ளதாகவும் தற்சமயம் 14 அத்தியாவசிய மருந்து பொருட்கள் போதுமானளவு கையிருப்பில் இருப்பதாகவும் குறிப்பிட்டார்.

அத்துடன் 186 மருந்து வகைகளுக்கு நாடுமுழுவதும் தட்டுப்பாடு நிலவுவதாகவும் சுட்டிக்காட்டினார்.

பிற செய்திகள்

Leave a Reply