விசேட தேவைக்குட்பட்ட சிறுவர்களுக்கு பைசர் தடுப்பூசி- வவுனியா

வவுனியா மாவட்டத்தில் 12 தொடக்கம் 19 வயதுக்கு உட்பட்ட விசேட தேவையுடைய சிறுவர்களுக்கு பைசர் தடுப்பூசி ஏற்றும் பணிகள் வவுனியா மாவட்ட வைத்தியசாலையில் இன்று (05) ஆரம்பமாகி இடம்பெற்று வருகிறது

நாடளாவிய ரீதியில் 12 தொடக்கம் 19 வயதுக்குட்பட்ட விஷேட தேவையுடையவர்களுக்கு பைசர் தடுப்பூசிகள் வழங்கப்பட்டு வருகின்ற நிலையில், வட மாகாணத்திலும் அண்மையில் பைசர் தடுப்பூசிகள் வழங்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டு தடுப்பூசி ஏற்றும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு இருந்தது.

அந்தவகையில் வவுனியா மாவட்டத்தில் 12 தொடக்கம் 19 வயதுக்குட்பட்ட விசேட தேவையுடைய சிறுவர்களுக்கான பைசர் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கைகள் இன்று வவுனியா மாவட்டத்தில் ஆரம்பமாகி இடம்பெற்று வருகின்றது. முதற்கட்டமாக 60 பேருக்கு இன்றையதினம் தடுப்பூசி வழங்கப்பட இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

பைசர் தடுப்பூசியை வழங்க மன்னாரில் இருந்து வருகைதந்த வைத்தியர் சுதாகர் தலைமையிலான தாதியர்கள், வவுனியா வைத்தியசாலை வைத்தியர்கள் மற்றும் சுகாதாரத்துறையினருடன் இணைந்து குறித்த தடுப்பூசி ஏற்றும் பணிகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *