நாட்டில் மிக கடுமையான எரிபொருள் நெருக்கடி நிலவி வருகிறது. இந்த நிலையில் யாழில் நேற்று முதல், மாவட்டச் செயலகத்துக்கு அண்மையில் உள்ள ஐ.ஒ.சி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் எரிபொருளுக்கான டோக்கன் வழங்கப்பபடும் என மக்களுக்கு தகவல் கிடைத்துள்ளது.
இதனை அடுத்து நேற்று முதல் குறித்த எரிபொருள் நிரப்பு நிலையம் முன்பாக மக்கள் கூடியிருந்தனர்.

இந்த நிலையில் தற்போது வரை எரிபொருளோ, எரிபொருளுக்கான டோக்கனோ வழங்கப்படாத நிலையில், நீண்ட நேரம் காத்திருந்த மக்கள் விரக்தியில் யாழ்ப்பாணம் மாவட்டச் செயலக வாயிலை மூடி போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.

பிற செய்திகள்