யாழ்ப்பாணம்- திருநெல்வேலி பல்கலைக்கழகத்தில் அமைந்துள்ள, ஸ்ரீ பார்வதி சமேத பரமேஸ்வரர் ஆலய மகா கும்பாபிஷேகம் எதிர்வரும் 6ஆம் திகதி புதன்கிழமை இடம்பெறவுள்ளது.
எண்ணெய்க்காப்பு எதிர்வரும் 5 ஆம் திகதி காலை 8 மணி முதல் மாலை 4 மணிவரை இடம்பெறவுள்ளது. அன்றைய தினம் இதய சுத்தியுடன் அடியவர்கள் வருகை தந்து எம்பெருமான் அருளைப் பெற்றுக்கொள்க என பரமேஸ்வரா கல்லூரி இயக்குனர் சபை, கும்பாபிஷேக திருப்பணிச் சபை கேட்டுக்கொண்டுள்ளது.
மேலும் எதிர்வரும் முதலாம் திகதி முதல், அதிகாலை 5 மணிக்கு கணபதி ஹோமம் மற்றும் லக்சுமி ஹோமம் இடம்பெறும்.
கும்பாவிசேக நாளான 6 ஆம் திகதி அதிகாலை 4 மணிக்கு யாக பூஜைகளுடன், அபிஷேகம் ஆரம்பமாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பிற செய்திகள்