அக்கரைப்பற்றில் ரூ. 20 இலட்சம் பணம்,13 பவுண் தங்க நகைகள் திருட்டு

அக்கரைப்பற்று, ஜுன் 30

அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட அக்கரைப்பற்று 7ஆம் பிரிவில் உள்ள வீடு ஒன்றில் இன்று அதிகாலை ரூ.20 லட்சத்து 40 ஆயிரம் பணமும் 13 பவுண் நகையும் இரு கைத்தொலைபேசிகளும் திருடப்பட்டுள்ளதாக அக்கரைப்பற்று  ரிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

நேற்றிரவு (29) மின்சாரம் தடைப்பட்ட நேரத்திலும் அதன் பின்னரும் வீட்டின் உரிமையாளரும் அவரது மனைவியும் வீட்டு வாசலில் பேசிக்கொண்டிருந்த பின்னர் தூக்கத்துக்குச் சென்றுள்ளனர். இதன் பின்னர் இரவு 11 மணியளவில் வியாபார நிலையத்தை மூடிய மகன் வீடு திரும்பி உணவை அருந்திவிட்டு உறக்கத்துக்குச் சென்றுள்ளார்.

வங்கியில் வைப்பிலிடுவதற்காக வைத்திருந்த பணத்தையும் மற்றும் தான் அணிந்திருந்த தங்க நகைகளையும் கட்டிலின் கீழ் வைத்துவிட்டே அவர் உறங்கியுள்ளார். இந்நிலையில் அதிகாலை 2 மணியளவில் மனைவியின் குரல் கேட்டு எழுந்த வீட்டின் உரிமையாளர் தனது மனைவியின் கழுத்தில் அணிந்திருந்த மாலை காணப்படாததனை கண்ணுற்றுள்ளார்.

பின்னர் மகனின் தனது அறையைப் பார்த்தபோது அவர் வைத்திருந்த பணம் நகை மற்றும் கைத்தொலைபேசி உள்ளிட்டவையும் திருடப்பட்டுள்ளதை அறிந்துள்ளார். இதனையடுத்து செய்யப்பட்ட முறைப்பாட்டையடுத்து சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை அக்கரைப்பற்று பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *