
எதிர்வரும் 15 ஆம் அல்லது 16 ஆம் திகதி நாட்டுக்கு எரிபொருள் கப்பல் வரும் என எதிர்பார்ப்பதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சாகல ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
எரிபொருள் பிரச்சினைகள் குறித்து, இலங்கைக் கனிய எண்ணெய் விநியோகஸ்தர்கள் சங்கத்தினருக்கும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையே நேற்றுமுன்தினம் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இவ்வாறு தெரிவித்தார்.
அத்துடன் இலங்கைக் கனிய எண்ணெய் விநியோகஸ்தர்கள் சங்கத்தால், வங்கிக் கடனை மீள செலுத்தல் மற்றும் ஊழியர்களுக்கு வேதனம் வழங்குதல் உள்ளிட்ட பிரச்சினைகள் தொடர்பில் பிரதமருக்குத் தெரிவிக்கப்பட்டது.