வெளிவிவகார அமைச்சின் கொன்சியூலர் பிரிவின் சேவைகள் தொடர்பான அறிவிப்பு

வெளிவிவகார அமைச்சின் கொன்சியூலர் விவகாரங்கள் பிரிவின் சேவைகள் வழமைபோல் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தற்போதைய எரிபொருள் நெருக்கடி காரணமாக வெளிவிவகார அமைச்சின் கொன்சியூலர் சேவைகள் முன்னதாக வாராந்தம் 3 நாட்களுக்கு மாத்திரம் மட்டுப்படுப்படுத்தப்பட்டிருந்தது.

எனினும், குறித்த சேவைக்கு அதிக கேள்வி ஏற்பட்டடுள்ளதால், அதனை பரிசீலித்து மீண்டும் அந்த சேவையை வழமைபோல் நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக வெளிநாட்டு விவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதற்கமைய, யாழ்ப்பாணம், மாத்தறை, கண்டி, திருகோணமலை மற்றும் குருநாகல் ஆகிய இடங்களில் உள்ள பிராந்திய கொன்சியூலர் அலுவலக சேவைகள் வழமைபோல இடம்பெறும் என வெளிவிவகார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *