மீன்பிடிக்கச் சென்ற மீனவர் கடலில் மூழ்கி உயிரிழப்பு !

வாழைச்சேனையில் மீன்பிடிக்கச் சென்ற நபர் ஒருவர் கடலில் விழுந்து நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக

செப்டெம்பர் 17ஆம் திகதி மாலை மூன்று பேர் மீன்பிடிக்க சென்றதாகவும், அவர்களில் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

மாவடிச்சேனை பிரதேசத்தை சேர்ந்த 48 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். சடலம் வாழைச்சேனை வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *