குழந்தைகளின் போசாக்கின்மை தொடர்பாக வெளியிட்ட அறிக்கைக்கு யுனிசெஃப் வருத்தம் தெரிவித்தது – சுகாதார அமைச்சர்

குழந்தைகளின் போசாக்கின்மை தொடர்பாக யுனிசெஃப் முன்னர் வெளியிட்ட அறிக்கைகள் குறித்து வருந்துவதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுளுமன்ற உறுப்பினர் ரோஹினி கவிரத்ன யுனிசெப் வெளியிட்ட அறிக்கை குறித்து எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தான் யுனிசெஃப்பின் உறுப்பினர்களை அமைச்சகத்திற்கு அழைத்து, ஏன் இப்படி ஒரு அறிக்கையை வெளியிட்டீர்கள் என்று கேட்டதாகவும் அதற்கு அவர்கள் வருத்தம் தெரிவித்தனர் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அவர்கள் 2016ஆம் அண்டிற்குரிய அறிக்கையையே வெளியிட்டனர் என்றும் சுகாதார அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply