அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் 6 பேர் கைது!

<!–

அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் 6 பேர் கைது! – Athavan News

அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட 6 இந்திய மீனவர்கள்  நேற்று (வெள்ளிக்கிழமை) இரவு இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.

நேற்று இரவு காரைநகர் கோவளம் கடற்பரப்பில் இந்திய மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட இலங்கை கடற்படையினர் இந்தியாவைச் சேர்ந்த ஒரு படகையும் அதில் இருந்த 6 மீனவர்களையும் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்டவர்களையும் படகினையும் கடற்படையினர் மயிலட்டி மீன் பிடி துறைமுகத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர்.


Leave a Reply