ஜனாதிபதி செயலகத்திற்கு தான் ஒருபோதும் செல்ல மாட்டேன் என விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் தற்போது இடம்பெற்றுவரும் விசேட ஊடகவியலாளர் சந்திப்பிலேயே விளையாட்டுத்துறை அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
அதேவேளை ‘நான் ஜனாதிபதியை சந்திப்பேன். ஆனால் செயலகத்திற்கு செல்லமாட்டேன். நான் அங்கு ஒரு கிளாஸ் தண்ணீர் குடிக்க மாட்டேன் அது விஷமாக இருக்கலாம் எனவும் தெரிவித்தார்.