கிழக்கு உக்ரைனில் தனி பிராந்தியங்களாக அறிவிக்கப்பட்ட இரு இடங்களுக்கும் துருப்புக்களை அனுப்ப புடின் உத்தரவு!

கிழக்கு உக்ரைனில் கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ள இரண்டு பிராந்தியங்களை சுதந்திர பிராந்தியங்களாக அங்கீகரித்த பின்னர், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின், அங்கு துருப்புக்களை அனுப்ப உத்தரவிட்டுள்ளார்.

இரவோடு இரவாக வெளியிடப்பட்ட காட்சிகள் ரஷ்ய இராணுவ வாகனங்கள் உக்ரைன் எல்லையை நோக்கி செல்வதைக் காட்டுகின்றன.

2014ஆம் ஆண்டிலிருந்து பிரிந்து சென்ற பகுதிகளில் துருப்புக்கள், அமைதி காக்கும் பணிகளில் ஈடுபடும் என்று ரஷ்யா கூறியுள்ளது.

ஆனால், அவர்களை அமைதி காக்கும் படையினர் என்று அழைப்பது முட்டாள்தனம் என்று அமெரிக்கா கூறியது. ரஷ்யா போருக்கான சாக்குப்போக்கை உருவாக்குவதாக அமெரிக்கா குற்றம் சாட்டியது.

இதேவேளை உக்ரைன் ஜனாதிபதி தனது நாடு எதற்கும் அல்லது யாருக்கும் பயப்படவில்லை என்று கூறியுள்ளது.

இரவு நேர தொலைக்காட்சியில் நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில், ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி, உக்ரைனின் சர்வதேச நட்பு நாடுகளிடமிருந்து தெளிவான மற்றும் பயனுள்ள ஆதரவு நடவடிக்கைகளுக்கு அழைப்பு விடுத்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *