
நுவரெலியா, மார்ச் 28
மது அருந்தி வாகனம் செலுத்திய குற்றச்சாட்டில் நுவரெலியா மாவட்ட சுகாதார சேவை பணிப்பாளர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதாக ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.
தலவாகலை பொலிஸாரினால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் இன்று நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.





