48 மணிநேரத்தில் வரிசை கலாசாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க தயாராகின்றார் ரணில்?

ரணில் விக்ரமசிங்கவின் நாடாளுமன்ற ஆசனம், பிரதமர் ஆசனமாக மாறுவதற்கான சாத்தியம் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கொழும்பில் இன்று (செவ்வாய்கிழமை)) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே ஐக்கிய தேசிய கட்சியின் தவிசாளரும், முன்னாள் அமைச்சருமான வஜிர அபேவர்தன இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார்.

தனது கட்சியின் தலைவர், நாட்டை பொறுப்பேற்று 48 மணித்தியாலங்களிலேயே அனைத்து விதமான வரிசைகளுக்கும் முற்றுப் புள்ளி வைக்கப்படும் எனவும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

தற்போதைய ஆட்சியாளர்கள் சர்வதேசத்தின் நம்பிக்கையை இழந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ரணில் விக்ரமசிங்கவின் கீழ் அரசாங்கமொன்று அமையுமானால் சர்வதேசத்தின் உதவிகள் உடனடியாக கிடைக்குமெனவும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

Leave a Reply