
தாடி வளர்க்காத மற்றும் மத பாரம்பரியமான உடை அணியாத அரசு ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்படுவர் என தலிபான்கள் எச்சரித்துள்ளனர்.
ஆப்கானிஸ்தானில் கடந்த ஆண்டு தலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றிய நிலையில் பல கடும் சட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகின்றனர்.
அவற்றில் பெண்கள் தனியாக விமான பயணம் செய்ய தடை, மேல்நிலை கல்வி கற்க மாணவிகளுக்கு அனுமதி இல்லை, பூங்காக்களில் வாரத்தில் 3 நாள்கள் மாத்திரமே பெண்கள் அனுமதிக்கப்படுபவர் ஆகியவை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன.
இந்த நிலையில், அரசு ஊழியர்களுக்கும் கடும் கட்டுப்பாட்டை விதித்துள்ளனர்.‘‘அரசு ஊழியர்கள் தாடி வளர்க்க வேண்டும். மத பாரம்பரிய உடையான மிக நீண்ட ஜிப்பா மற்றும் தலையில் குல்லா அணிய வேண்டும்’’ என, தலிபான்கள் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.
இதை மீறுபவர்கள் பணி நீக்கம் செய்யப்படுவர் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.





