
பதுளை, ஏப் 01
பதுளை – பசறை பிரதான வீதி பதுள்ளஸ்ரீகம பகுதி வீடொன்றில் இன்று காலை தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
வாடகை முறையில் உணவு பரிமாறும் பொருட்களை பகிரந்தளிக்கின்ற வீட்டின் அறையில் பெறுமதியான சமையல் உபகரணங்கள், உணவு பாத்திரங்கள், சமையல் எரிவாயு போன்ற தீக்கிரையாகியுள்ளன.
இச்சம்பவம் தொடர்பாக பதுளை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.





