காலி முகத்திடலில் வடை விற்ற கோட்டா ஆதரவாளர்! மக்களால் விரட்டியடிப்பு

அரசாங்கத்திற்கு எதிராக கொழும்பு காலி முகத்திடலில் இடம்பெற்று வரும் மக்கள் போராட்டத்தில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு ஆதரவான ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

அரசாங்கத்திற்கு ஆதரவான ஆர்ப்பாட்டத்தின் போது ஜனாதிபதி செயலகத்திற்கு முன்னால் “எங்களுக்கு கோத்தா வேண்டும்” என்ற வாசகம் அடங்கிய பதாதையை கையில் ஏந்தியவாறு அந்த நபர் காணப்பட்டார்.

அந்த நபரின் படங்கள் சமூக ஊடக தளங்களில் பரப்பப்பட்டன, அதன் மூலம் அவரது அடையாளம் உறுதியாகியுள்ளது.

இந்த நிலையில், காலி முகத்திடலில் போராட்டம் நடத்துபவர்களுக்கு வடை விற்பதை பொதுமக்களால் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து பொதுமக்கள் அவரை போராட்டம் நடந்த இடத்தில், பணியில் இருந்த போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

அந்த நபர் மக்களின் உணவில் விஷத்தை கலக்கக்கூடியவர் என்பதால், அவர் மக்களுக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக அவர்கள் கூறியுள்ளனர்.

இதையடுத்து, போராட்டக்காரர்கள் மற்றும் காவல்துறையினரால் கடுமையாகத் தாக்கதாக்க முயற்சித்த போது, தன்னை மன்னித்துவிடுமாறு கூறியுள்ளார்.

மன்னித்து விடுமாறு கூறினால் குறித்த நபர் ஏதோ தவறு செய்து வருகின்றார், உடனடியாக அவரை அங்கிருந்து வெளியேற்ற வேண்டும் என இளைஞர்கள் கூறியுள்ளார்.

சம்பவ இடத்தில் இருந்த பொலிஸ் அதிகாரிகள் அந்த நபரை தடுத்து நிறுத்தி அங்கிருந்து வெளியேற்றியுள்ளனர்.

Leave a Reply