நாளை சம்பந்தன் இல்லத்தில் அவசரமாக கூடவுள்ள கூட்டமைப்பினர்!

தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் நாளை (19) மாலை இடம்பெறவுள்ளது.

ஜனாதிபதிக்கு எதிரான குற்றப் பிரேரணை, அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை என்பவற்றை பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி சமர்ப்பிக்கவுள்ள நிலையில், தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பு குழு கூட்டம் இடம்பெறவுள்ளது.

நாளை மாலை 4 மணிக்கு இரா.சம்பந்தனின் இல்லத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் இடம்பெறவுள்ளது.

இதை தொடர்ந்து மாலை 5 மணிக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழு கூட்டம் இடம்பெறவுள்ளது.

Leave a Reply