40,000 மெட்ரிக் தொன் டீசல் அடங்கிய கப்பல் ஒன்று எதிர்வரும் இரண்டு நாட்களில் நாட்டை வந்தடையும் என இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
இந்தியக் கடனுதவியின் கீழ் குறித்த எரிபொருள் இலங்கைக்கு கிடைக்கவுள்ளது என பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் சுமித் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.
இதேவேளை நாட்டில் போதுமான அளவு பெட்ரோல் கையிருப்பு இருப்பதாகவும் சுமித் விஜேசிங்க கூறியுள்ளார்.