
நேற்று ஒரு கொலை நடைபெற்றுள்ளது.நாட்டில் இன்னமும் மக்கள் துன்பத்தில் அல்லல் படுகின்றனர்.இதற்கு தீர்வு காண வேண்டும்.அதற்கு நீண்ட நேரம் தேவை.
ஆகவே மதிய நேரம் உணவு உண்ணாமல் அந்த ஒரு மணித்தியாலத்தை நாம் எமது விவாதத்துக்கு பயன்படுத்தலாம்.இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ஹெகலிய ரம்புக்வெல ஆகியோர் தெரிவித்தனர்.
எனினும் அதனை ஆளும் கட்சி எம்.பிக்கள் கண்டுகொள்ளவில்லை.
இதனால் ஆத்திரம் அடைந்த சஜித் பிரேமதாச ,இங்கே சோறு சாப்பிடவா வந்தீர்கள்,எமக்கு சோறு வேண்டாம் என்று முதலே கூறிவிட்டோம்.வேண்டும் என்றால் நீங்களே போய் சாப்பிடுங்கள் என்றார்.





