இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜுலி சங் அவர்களை, மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் இன்று (20) சந்தித்து கலந்துரையாடினார்.
நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிகள் மற்றும் நாடு எதிர்கொண்டுள்ள பல்வேறு விடயங்கள் பற்றியும் கலந்துரையாடினார்.மேலும், பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, தொடர்ந்தும் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள நபர்கள் குறித்தும் தூதுவரிடம் சுட்டிக்காட்டப்பட்டது.
அத்துடன், நாட்டின் தற்போதைய இக்கட்டான சூழ்நிலையில் இருந்து எவ்வாறு மீள்வது என்பது தொடர்பிலும் இங்கு கலந்தாலோசிக்கப்பட்டது.இதன்போது, சர்வதேச சமூகம் இந்த நெருக்கடியான சூழலில் இலங்கைக்கு ஒத்துழைப்பு நல்குவதும், சிறுபான்மைச் சமூகத்தின் மீது கரிசனை காட்டுவதும் மகிழ்ச்சி அளிப்பதாக மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் எடுத்துரைத்தார்.
இந்த சந்திப்பில் மக்கள் காங்கிரஸின் தவிசாளர் அமீர் அலியும் உடனிருந்தமை குறிப்பிடத்தக்கது.







