
காலிமுகத்திடலில் அரசாங்கத்தை பதவி விலகுமாறு வலியுறுத்தி நடைபெற்று வரும் ஆர்ப்பாட்டம் தொடர்பில் இன்றைய பாராளுமன்ற அமர்வில் கருத்து தெரிவித்த ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரணதுங்க,
காலி முகத்திடலில் ஆரம்பத்தில் இடம்பெற்றது மக்கள் போராட்டம் என்று கூறலாம்.இப்போது அங்கே நடப்பது கார்னிவெல்.கழியாட்டம் தான் அங்கே நடைபெறுகிறது. ஒரே ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம்.பலர் வருகின்றனர் இலவசமாக பொருட்களை வழங்கி தங்களை பெருமைபடுத்திக்கொள்கின்றனர்.இது ஒரு சூழ்ச்சி என தெரிவித்தார்.





