நீர்த்தேக்கங்களின் மொத்த கொள்ளளவு 72 வீதமாக அதிகரிப்பு!

நாட்டின் சில பகுதிகளில் பெய்து வரும் மழை காரணமாக நீர்த்தேக்கங்களின் மொத்த கொள்ளளவு 72 வீதமாக அதிகரித்துள்ளது.

நீர்ப்பாசன திணைக்களத்தின் நீர் முகாமைத்துவ பணிப்பாளர் டி அபேசிறிவர்தன இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார்.

ராஜாங்கனை நீர்த்தேக்கத்தின் இரண்டு கதவுகள் தலா 3 அடியாலும், மேலும் இரண்டு கதவுகள் தலா 2 அடிகளாலும் திறக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நுவரவெவ, நச்சுடுவ வெவ, மஹவிலச்சிய வெவ மற்றும் யான் ஓயா ஆகிய நீர்த்தேக்கங்கள் அதிகபட்ச கொள்ளளவை எட்டியுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply