அரிசிக்கு வரிசையில் நிற்கும் நிலை – மக்கள் கவலை!

அரிசிக்கு வரிசையில் நிற்கும்  நிலை  ஏற்ப்பட்டுள்ளதாக மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

நாட்டில் ஏற்ப்படடுள்ள பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் தற்பொழுது  அரிசிக்கும் வரிசையில் நிக்கும் நிலை ஏற்ப்பட்டுள்ளதாக மக்கள் கவலை வெளியிடுகின்றனர்.

தற்பொழுது கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள சதோச விற்பனை நிலையத்தில்  ஒரு கிலோ 140 ரூபாவிற்கும், தீட்டல் அரிசி ஒரு கிலோ 110 ரூபாவிற்கும்  விற்பனை செய்யப்படுகிறது.

இதனைப் பெற்றுக்கொள்வதற்கு பல்வேறு பகுதிகளிலுமிருந்து மக்கள் சென்று நீண்ட வரிசையில் காத்திருந்து அரிசியினை பெற்று வருகின்றனர்.

Leave a Reply