கற்பாறைகளுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த கைக்குண்டு!

திருகோணமலையில் பாறைக்கு இடையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் கைக்குண்டு ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இக்கைக்குண்டு இன்று மாலை மீட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

திருகோணமலை – அக்போகம பகுதியில் கற்பாறைகளுக்குள் மறைத்து வைத்திருந்த நிலையில் கைக்குண்டு ஒன்றினை பொலிஸார் மீட்டுள்ளனர்.

கந்தளாய் குளத்தினை அண்டிய பகுதியில் போடப்பட்டிருந்த கருங்கற்பாறைகளுக்குள்ளிருந்தே கைக்குண்டு மீட்கப்பட்டுள்ளது.

அக்போபுர பொலிஸாருக்கு கிடைத்த தகவலில் அடிப்படையில், கைக்குண்டினை பொலிஸ் விசேட அதிரடைப்படையினரின் உதவியுடன், கந்தளாய் நீதிமன்ற நீதிவானின் உத்தரவின் பேரில், கைக்குண்டை செயழிலக்கச் செய்வதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளதாகவும் அக்போபுர பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *