கனடாவில் உயிரிழந்த இலங்கை பெண்; மனதை உருக்கும் மகனின் சித்திரம்!

கனடாவில் வானொன்று பாதசாரிகள் 10 பேர் மீது மோதி விபத்திற்குள்ளான கொலை வழக்கில் தீர்ப்பு வழங்கப்படுவதற்கு முன் பாதிக்கப்பட்டவர்களின் தாக்க அறிக்கைகள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.

குறித்த விபத்தில் உயிரிழந்த இலங்கைப் பெண்ணான ரேணுகா அமரசிங்கவின் 9 வயதான மகன் டியோன் (Diyon), படம் ஒன்றை தனது தாக்க அறிக்கையாக சமர்ப்பித்துள்ளார்.

குறித்த தாக்க அறிக்கையில் தன் தாயும், தானும் பனிச்சறுக்கு செய்வது போல் படமொன்றை வரைந்துள்ளான். தானும் தன் தாயும் முன் சென்ற இடம் ஒன்றையோ, அல்லது இனி செல்ல வேண்டும் என தான் எண்ணியதையோ படமாக வரைந்து அந்த சிறுவன் சமர்ப்பித்துள்ளார்.

குறித்த சம்பவத்தில் தனது தோழியை இழந்ததுடன் முகத்தில் படுகாயமடைந்த SoRa என்ற பெண், தன் இதயத்தில் நிரந்தரமாக ஒரு வெற்றிடம் ஏற்பட்டுவிட்டதுபோல் உணர்வதாக தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்கள், உயிரிழந்தவர்களின் நண்பர்கள், உறவினர்கள் என பலர் தாக்க அறிக்கைகளை விசாரித்த நீதிபதி Justice Anne Molloy, குற்றவாளியான அலெக் மின்னேசியனுக்கு 25 ஆண்டுகளுக்கு ஜாமீனில் வர முடியாத ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளார்.

அத்துடன், கொலை முயற்சி குற்றங்களுக்காக மின்னேசியனுக்கு 20 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளதுடன், இந்த தண்டனைகளை அவர் அனுபவிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *