இலங்கை அரசியலில் பேசுபொருளாக மாறிய முட்டை!

நாட்டின் தற்போதைய நெருக்கடியான நிலைக்கு மத்தியில் அரசியல் அரங்கில் கடந்த சில நாட்களாக பேசுபொருளாக காணப்படுவது முட்டை.

இந்த முட்டை தொடர்பில் பல்வேறுபட்ட கருத்துக்கள் மற்றும் விலை அதிகரிப்பு விலை குறைப்பு என பல்வேறு பட்ட நிலைகளில் இந்த முட்டை விவகாரம் இடம்பிடித்துள்ளது.

இவ்வாறான நிலையில் வர்த்தமானி அறிவித்தலின் ஊடாக அறிவிக்கப்பட்டுள்ள முட்டை விலையில் எவ்வித மாற்றமும் இல்லை என வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

முட்டை உற்பத்தியாளர்கள் சங்கத்தின் சில உறுப்பினர்களுடன் நேற்றுமுன்தினம் (ஆகஸ்ட் 24) கலந்துரையாடல் இடம்பெற்றதாகவும், அங்கு அவர்கள் வெவ்வேறு விலைகளை முன்மொழிந்ததாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

விலைகள் பரிந்துரைக்கப்பட்ட போதிலும், வர்த்தமானி அறிவித்தல் மூலம் முட்டையின் அதிகபட்ச சில்லறை விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதால், அவர்கள் பரிந்துரைத்த விலையில் முட்டைகளை வழங்க முடியாது என அமைச்சர் கூறினார்.

எவ்வாறாயினும், இது தொடர்பான கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த முட்டை உற்பத்தியாளர் சங்கம்,

ஒரு முட்டையை அதிகபட்ச சில்லறை விலையாக 50 ரூபாவிற்கு விற்பனை செய்வதற்கு வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ சந்தர்ப்பம் வழங்குவதற்கு இணக்கம் தெரிவித்ததாக குறிப்பிட்டுள்ளது.

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *