நல்லூர் தேரும்:தியாகி திலீபனும்!
வரலாற்று சிறப்பு மிக்க யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலய தேர்த்திருவிழா பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் புடைசூழ நேற்று வியாழக்கிழமை காலை இடம்பெற்றது.
தேர்த்திருவிழாவை தொடர்ந்து இன்று வெள்ளிக்கிழமை காலை தீர்த்த திருவிழாவும் மாலை கொடி இறக்க திருவிழாவும் இடம் பெறும்.
இதனிடையே நல்லூர் பின்வீதியில் அமைந்துள்ள தியாகி திலீபனின் தூபியும் நேற்று மக்களது ஆர்வத்தை தோற்றுவித்திருந்தது.
திலீபனின் தூபியில் கற்பூரமேற்றி பெருமளவில் மக்கள் வழிபாட்டில் ஈடுபட்டிருந்தமையை காணக்கூடியதாக இருந்தது.