நாட்டில் இந்த வருடத்தில் சிறைக்கு செல்வோர் தொகை அதிகரிப்பு!

2022 ஆம் ஆண்டு தொடக்கத்தில் சந்தேக நபர்கள் சிறையில் அடைக்கப்படும் போக்கு அதிகரித்துள்ளதாக சிறைச்சாலை திணைக்களம் தெரிவித்துள்ளது.

சிறைச்சாலைகள் ஆணையாளரும் (கட்டுப்பாடு, புனர்வாழ்வு) ஊடகப் பேச்சாளருமான சந்தன ஏகநாயக்க, சிறைச்சாலை புள்ளிவிபரங்களின்படி பல்வேறு குற்றச்சாட்டுக்கள் தொடர்பிலேயே இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

அதன்படி, 25.08.2022 வரை, கைதிகளின் எண்ணிக்கையின்படி, 8,285 கைதிகளும் 14,381 சந்தேக நபர்களும் என மொத்தம் 22,666 பேர் இவ்வாறு சிறைச்சாலைக்கு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து சிறைச்சாலைகளையும் உள்ளடக்கியதாக புள்ளிவிபரங்கள் பெறப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *