
உலகளாவிய ரீதியில் மந்தபோசணையினால் பாதிக்கப்பட்ட சிறுவர்களின் எண்ணிக்கை உயர்வாகக் காணப்படும் முதல் 10 நாடுகளின் பட்டியலில் இலங்கையும் உள்ளடங்குவதாகத் தமது புதிய அறிக்கையில் சுட்டிக்காட்டியிருக்கும் யுனிசெப் அமைப்பு, நாடளாவிய ரீதியில் சுமார் 2.3 மில்லியன் சிறுவர்கள் உள்ளடங்கலாக 5.7 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் மனிதாபிமான உதவிகள் தேவைப்படும் நிலையில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.