யாழ்ப்பாணம் மாநகர மற்றும் நல்லூர் ஆலய சூழலில் ஊதுபத்தி வியாபாரம் செய்த 3 பெண்கள்,ஆண் ஒருவர் மற்றும் அவர்களை வேலைக்கு அமர்த்திய விடுதி உரிமையாளர் என ஐவர் நீதிமன்றால் நேற்று விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்
NR சிறுவர்களை வேலைக்கு அமர்த்தியமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களின் கீழ் அவர்கள் கைது செய்யப்பட்டு யாழ்ப்பாணம் நீதிவான் மன்றில் முற்படுத்தப்பட்ட போதே இந்த உத்தரவு வழங்கப்பட்டது .
கைக்குழந்தை உள்ளிட்ட 7 சிறுவர்களை சிறைச்சாலை உத்தியோகத்தர்களின் கண்காணிப்பில் வைக்க உத்தரவிட்ட யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் ஏ.ஏ.ஆனந்தராஜா , அவர்களை சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர்களிடம் இன்று பாரப்படுத்துவதற்காக மன்றில் முற்படுத்த கட்டளையிட்டார் .
பிற செய்திகள்