கோட்டாபய இலங்கைக்கு வரும் திகதி வெளியானது

கொழும்பு, ஓக26

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ, எதிர்வரும் செப்டம்பர் மாதம் 3ம் திகதி நாட்டிற்கு திரும்பவுள்ளதாக ரஷ்யாவிற்கான முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்க தெரிவிக்கின்றார்.

கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

இந்த மாதம் 24ம் திகதி வருகைத் தர திட்டமிட்டிருந்த போதிலும், தான் அது குறித்து வெளியிட்ட கருத்து காரணமாக எழுந்த சர்ச்சையை அடுத்து, கோட்டாபய ராஜபக்ஸவின் வருகை பிற்போடப்பட்டதாகவும் அவர் கூறுகின்றார்.

நுகேகொடை – மிரிஹான பகுதியிலுள்ள தமது வீட்டில் தங்குவதே, கோட்டாபய ராஜபக்ஸவின் மனைவியுடைய கோரிக்கை என கூறிய அவர், கோட்டாபய ராஜபக்ஸவிற்கு இலங்கை அரசாங்கம் உத்தியோகப்பூர்வ வீடொன்றை வழங்க திட்டமிட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

கோட்டாபய ராஜபக்ஸவை அரசியலுக்குள் மீண்டும் கொண்டு வருவதற்கு அவரது சகாக்கள் முயற்சித்து வருவதாகவும் அவர் தெரிவிக்கின்றார்.

தேசிய பட்டியல் ஊடாக பாராளுமன்றத்திற்கு கொண்டு வருவதற்கும், பிரதமர் பதவியில் அமர்த்துவதற்கும் அவரது சகாக்கள் முயற்சித்து வருவதாக உதயங்க வீரதுங்க குறிப்பிடுகின்றார்.

எனினும், கோட்டாபய ராஜபக்ஸவின் இந்த எதிர்பார்ப்பை நிறைவேற்றுவதற்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிலுள்ள பெரும்பாலானோர் இணங்குவார்களா என்பது சந்தேகம் எனவும் அவர் கூறுகின்றார்.

எனினும், கோட்டாபய ராஜபக்ஸவின் ஆழ் மனத்தில் அந்த ஆசை உள்ளது என ரஷ்யாவிற்கான முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்க தெரிவிக்கின்றார். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *