யாழில் வீட்டுத்தோட்ட செயற்றிட்டத்துக்கு 10 லட்சம் ரூபா!

ஐ.நா வளர்ச்சித் திட்டத்தின் என்.டி.பி 10 லட்சம் ரூபா நிதியொதுக்கீட்டுடன் 56 பெண் பயனாளிகளுக்கான வீட்டுத்தோட்ட செயற்றிட்டம் வலி.தென்மேற்குப் பிரதேசசபையின் மகளிர் உறுப்பினர்களால் முன்னெடுக்கப்படவுள்ளது .

வலி தென்மேற்குப் பிரதேசசபையின் 28 வட்டாரங்களிலிருந்தும் வீட்டுத்தோட்ட செய்கையில் ஆர்வமுள்ள 2 பெண் பயனாளிகள் வீதம் 56 பயனாளிகள், வட்டார உறுப்பினர்கள் மற்றும் வட்டார உத்தியோகத்தர்களால் தெரிவுசெய்யப்பட்டு சபையின் மகளிர் உறுப்பினர்களின் மேற்பார்வையின் அடிப்படையில் இந்த செயற்றிட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது .

செயற்றிட்டத்துக்கென ஒதுக்கப்பட்ட 10 லட்சம் ரூபா நிதியில் 3 லட்சம் ரூபா வீட்டுத்தோட்ட உப கரணங்களுக்கும் , 2 லட்சம் ரூபா விற்பனை நிலையங்களை அமைத்தல் , துண்டுபிரசுரங்களுக்கும் மிகுதியான நிதி பயிற்சி மற்றும் இணைச் செயற்றிட்டங்களுக்கும் பயன்படுத்தப்படவுள்ளது .

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *