உலகத் தலைவர்கள் பட்டியலில் மிகவும் சக்திவாய்ந்தவர் ரணில்

கொழும்பு, ஓக 26

தற்போதைய உலகத் தலைவர்கள் பட்டியலில் மிகவும் சக்திவாய்ந்த தலைவராக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அங்கீகரிக்கப்பட்டுள்ளார் என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரான வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.

தற்போதைய உலகத் தலைவர்களில் மிகவும் சக்திவாய்ந்த தலைவர் தற்போது இலங்கையை ஆட்சி செய்கிறார் என அவர் தெரிவித்துள்ளார்.

மக்கள் தமது பொதுப் போராட்டங்களினூடாக முறைமை மாற்றத்தை விரும்புவதாக சுட்டிக்காட்டிய அபேவர்தன, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கோரப்பட்ட அந்த மாற்றத்தை ஏற்படுத்த வல்லவர் என்றும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *