
மக்கள் மக்கள் ஆணையின்றி ஜனாதிபதி பதவியை வகிக்கும் ரணில் விக்கிரமசிங்க ஹிட்லர் பாணி அரசாங்கத்தை அமைக்க காய் நகர்த்தி வருகின்றார் என ஐக் கிய சோசலிசக் கட்சியின் தலைவர் சிறிதுங்க ஜயசூரிய தெரிவித்துள்ளார் .
அனைத்து பல்கலைக் கழக மாணவர் ஒன்றி யத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட கூட்டு ஊடக வியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார் .
அவர் மேலும் தெரிவிக்கையில் ,
தொழிலாளர் வர்க்கம் தலைமையிலான இடது சாரி சக்திகள் , விவசாய அமைப்புகள் , பெருந்தோட்ட மக்கள் மாத்திரமல்லாது வடக்கில் உள்ள தமிழ் மக்களையும் ஒன்றிணைத்து பாரிய மக்கள் சக்தி ஊடாக ரணில் – ராஜபக்ச அரசாங்கத்தை விரட்டுவதே எங்களின் இன்றைய வேலையாகிவிட்டது .
அடுத்த வருடம் பெப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் உள்ளூராட்சி சபைத் தேர்தலை ஜனாதிபதி நடத்தமாட்டார் . இராணுவ பொலிஸ் அரசை உருவாக்கும் வேலைத் திட்டத்தில் ஜனாதிபதி ஈடுபட்டுள்ளார் . 2015 ஆம் ஆண்டு நல்லாட்சி அரசாங்கத் தின் பிரதமராக பயங்கர வாத தடை சட்டத்தை இல்லாதொழிப்பதாக உறுதியளித்த தற்போதைய ஜனாதிபதி இன்று வெட்கமின்றி பயங்கரவாதத் தடைச்சட்டத்தைப் பயன்படுத்துகின்றார் .
இதன் மூலம் இந்த நாட்டின் எழுச்சி பெறும் மக்களின் வெறுப்பைக் கட்டுப்படுத்தலாம் என அவர் நினைத்துக்கொண்டிருக்கலாம் . நாங்கள் சொல்கிறோம் ரணில் , நினைவில் கொள்ளுங்கள் நீங்கள் செய்வது தவறு.என எச்சரிக்கை விடுத்துள்ளார் .
பிற செய்திகள்