ஊதியம் தொடர்பான சர்ச்சை: 115,000 றோயல் மெயில் தபால் ஊழியர்கள் வேலைநிறுத்தம்!

ஊதியம் தொடர்பான சர்ச்சையில், 115,000 றோயல் மெயில் தபால் ஊழியர்கள் இன்று (வெள்ளிக்கிழமை) வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

வெளிநடப்புக்கள் நடைபெறும் நான்கு நாட்களில் இது முதல் நாளாகும். மேலும், ஒகஸ்ட் 31ஆம் திகதி, 8 மற்றும் செப்டம்பர் 9 ஆகிய திகதிகளில் வெளிநடப்புக்கள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வேலைநிறுத்த நாட்களில் கடிதங்கள் வழங்கப்படாது மற்றும் சில பொதிகள் தாமதமாகும் என்று றோயல் மெயில் எச்சரித்துள்ளது.

தொழிலாளர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தொழிற்சங்கம், தற்போதைய பணவீக்க வீதத்தை மிக நெருக்கமாகப் பிரதிபலிக்கும் ஊதிய உயர்வைக் கோருகிறது.

றோயல் மெயில் வாடிக்கையாளர்களிடம் மன்னிப்புக் கேட்டு, இடையூறுகளை குறைக்க தற்செயல் திட்டங்களை வைத்திருப்பதாகக் கூறியது.

வேலைநிறுத்த நாட்களில் முடிந்தவரை விஷேட விநியோகம் மற்றும் ட்ராக் செய்யப்பட்ட 24 பொதிகளை விநியோகம் செய்யும். முடிந்தவரை மருத்துவ பரிந்துரைகளை வழங்குவதற்கும் முன்னுரிமை அளிக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *