ஜனாதிபதியிடம் மூன்று கோரிக்கைகளை முன்வைத்துள்ள கடற்தொழிலாளர்கள்!

முல்லைத்தீவு, கிளிநொச்சி, மன்னார், தென்னிலங்கை உட்பட்ட கடற்தொழிலாளர்கள் சம்மேளன சமாசனங்களின் தலைவர்கள் அனைவரும் 3 கோரிக்கைகளை முன்வைப்பதற்காக ஜனாதிபதி செயலகத்திற்குச் சென்றிருந்தோம் என முல்லைத்தீவு மாவட்ட கடற்தொழிலாளர்கள் சம்மேளன தலைவர் வி.அருள்நாதன் தெரிவித்தார்.

இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.

எரிபொருள் பிரச்சனை, இந்திய இழுவைப்படகு பிரச்சனை, வாழ்வாதாரத்திற்கு மானிய அடிப்படையில் ஒன்றும் வழங்காமை போன்ற கோரிக்கைலகளாகும். இந்த கோரிக்கைகளுக்கு எந்தவிதமான முடிவுகளும் வரவில்லை.

ஜனாதிபதி இல்லாததால் வருகின்ற செவ்வாய்க்கிழமை வந்தவுடன் இதற்கான கலந்துரையாடல் ஒன்றினை மேற்கொண்டு ஆலோசிக்கப்படும் என ஜனாதிபதியின் செயலாளர் மற்றும் கடற்தொழில் அமைச்சர் எமக்கு வாக்குறுதி அளித்திருந்தனர்.

3 மாதங்களுக்குரிய மீனவர்களின் வாழ்வாதாரத்திற்கான நஷ்ட ஈட்டினைப் பெற்றுத்தரலாம் என கடற்தொழில் அமைச்சர் கூறியிருந்தார். இதனை அவர் கட்டாயம் செய்வார் என நம்புகிறோம்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் சட்டவிரோதமான தடை செய்யப்பட்ட இந்திய இழுவைப்படகு தொழில்களை தடுத்து நிறுத்த வேண்டும் என்று பல தடவை கூறியிருந்தோம்.

இது தொடர்ந்தால் அதற்குரிய அதிகாரிகளை மாற்றம் செய்ய சொல்லி கூறியிருந்தோம். இதற்கு ஒரு முடிவினைப் பெற்றுத்தருவதாகவும் வாக்குறுதி அளித்திருந்தார்.

இந்த அதிகாரிகள் மாற்றம் செய்யப்பட்டு மக்களுக்கு சேவை செய்யக்கூடிய அதிகாரிகளை வருவார்களாக இருந்தால், முல்லைத்தீவு மாவட்ட மீனவர்களின் பிரச்சனைகள் மாற்றமடையும். எமது வாழ்வதாரத்தினை மீட்சி அடைய செய்வார்கள் என நம்புகிறோம்.- என்றார்.

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *