கிளிநொச்சி பாரதிபுரம் பகுதியில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
பாரதிபுரம் மத்திய வீதியில் எதிரெதிரே பயணித்த மோட்டார் சைக்கிளும், கப் வாகனமும் நேருக்கு நேர் மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தில், மோட்டார் சைக்கிளில் பயணித்த 30 வயதுடைய துரைராசா டிலக்சன் என்னும் இளம் குடும்பஸ்தர் சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.
கிளிநொச்சி கிருஸ்ணபுரம் பகுதியைச்ச சேர்ந்த உயிரிழந்தவரின் சடலம் கிளிநொச்சி வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டு, விசாரணைகளின் பின்னர் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.

இச்சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட கிளிநொச்சி பொலிஸார், கப் வாகனத்தின் சாரதியை கைது செய்து, இன்று நீதிமன்றில் முன்னிறுத்தினர்.
குறித்த சந்தேக நபரை எதிர்வரும் 6ம் திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
மேலும் யாழ்ப்பாணம் காரைநகர் பொன்னாலை பாலத்தில் இன்று காலை மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்து பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

யாழ்ப்பாணம் காரைநகரில் இருந்து மூளாய் வைத்தியசாலைக்கு மோட்டார் சைக்கிளில் பின்னால் இருந்து பயணித்த பெண் ஒருவர் பொன்னாலை பாலத்தில் திடீரென மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்து தரையில் தலை அடிபட்டு உயிரிழந்துள்ளார்
காரைநகர் சிவகாமி அம்மன் கோயில் பகுதியை சேர்ந்த 24 வயதுடைய பெண் ஒருவரே உயிரிழந்துள்ளார் குறித்த சம்பவம் தொடர்பில் வட்டுக்கோட்டை பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

பிற செய்திகள்